பெண்களுக்கு மட்டும் ஏன்
பெண்களுக்கு மட்டும் ஏன்???
பாலியல் வன்கொடுமையில் பச்சப்புள்ளைங்கல சிதைக்கிறாங்களே...
நாற்திசைகளும் இரக்கமின்றி தன் கதவுகளை அடைத்துக் கொண்டதே...
வழிபாட்டுத்தளத்துல வசதிகள் தேடுற மிருகங்களை என்ன செய்ய?
சமுதாய உயரத்துல சண்டாளங்கள்ல இருக்கானுக...
பெண்பித்து புடிச்ச பிசாசுங்க ஊரெல்லாம் உலாவருதே...
இச்சை வெறி புடிச்ச மிருகங்கள தேடிப்புடிச்சு வேட்டையாடும் வழிய முதல்ல கண்டறியணும் ...
அதிகார ஆணவங்கள் புத்திகேட்டு திரியுதே...
ஆசை மகளை பறிகொடுத்த பெத்தவங்கள பாத்து இதயம் உடஞ்சிருச்சே...
பொட்ட புள்ள பெத்தவன்லாம் ஈரக்கொல நடுங்கி உறஞ்சுபோயி கெடக்குறாங்க...
பெண்ணியம் பேசும் திருநாட்டில் மனிதத்தை மழலைகளுக்கு போதிக்கும் ஆளுமைகள் வேண்டும்...
இழந்தவரை போதும், இனி அக்காட்சிகள் திரும்புமாயின் கடும் சட்டங்கள் நிறைவேற வேண்டும்...
பெண்மையை நசுக்க நினைக்கும் எண்ணங்களெல்லாம் அடியோடு ஒழிக்கப்பட கண்ணீரோடு வேண்டுகிறேன்...
பெண்சக்தியை இவ்வுலகம் இதுவரை கண்டது குறைவு; கண்ணகியை அறிந்தோர் பெண்ணின் ஆற்றலை குறைத்து மதிப்பிடார்...