நிஜமாக வேண்டாமோ

நீண்ட நாட்களாக காணாத கண் குழலி நித்திரையில் என் கன்னத்தை கிள்ளி சிரிக்கிறாள்

நானோ விறைத்துப் போனவனாய் வேடிக்கை பார்த்தேன்

என் நெஞ்சில் குடியிருப்பவள் மீண்டும் வந்தாலோ என கதவை திறக்கையில் கணவனது அவள் புன்னகை அழிய நினைவு சின்னமானது எனக்குள்

ஆசை ஆசையாக நடந்தவை அனைத்தும் அரை நொடிகளில் கரைந்தோடிட

நான் கடவுளையே திட்டிப்பார்த்தேன் நீயும் ஒரு நாள் பிரிவின் வேதனை புரிவாயென .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (1-Aug-18, 8:10 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 794

மேலே