அனாதை

அரைக்கு ஆடையின்றி அடம்பிடித்து நான் கேட்க, காசில்லை போ என கன்னத்தில் அறை விட அப்பனுமில்லை, கவலையுடன் அடைந்து கொள்ள ஓர் அறையுமில்லை, என் நிலை மறைக்க திரையுமில்லை,
வயிற்றுக்கு இரையுமில்லை,
என் நிலை கண்டிரங்கும்
இறையுமில்லை,
சிறையாவது கொடுங்கள்,
இலையேல் விரைவில் என் உயிர் வான் நோக்கி விரையும்,
விறைத்துக் கொண்டு திரியும் குறை
மன மாந்தர்களே, நிறை மனது மாந்தர்களுடன் சேர்ந்து, மடிந்து என் உடல் விறைத்து போகும் முன் விரைந்து காப்பீரா?

எழுதியவர் : பாலமுருகன் பாபு (7-Aug-18, 11:13 am)
சேர்த்தது : BABUSHOBHA
Tanglish : anaadhai
பார்வை : 117

மேலே