வாழ வழி கிடைக்கும்

கவிதை
வாழ வழி கிடைக்கும்...
கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்

மனிதா...
தற்கொலைக்கு
தூக்க மாத்திரைகள்
தூக்குகயிறு விஷம்
தண்டவாளம்
பல வழிகள்
இருக்கும்போது...

உலகில்...
வாழ்வதற்கு
ஒரு வழியாவது
இல்லாமலா இருக்கும்
ஒரு நிமிடம்
சிந்தித்து நீ
தற்கொலைக்கு
விடை கொடு
வாழ்வதற்கு
வழி கிடைக்கும் !

பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (10-Aug-18, 11:29 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 109

மேலே