முறைகொண்டு சுகம் காணும் இல்லறமே இவள்வழி

அங்கம் அங்கமாய் அழகு இலட்சணமாய்
அங்குலம் அங்குலமாய் அளவு கட்சிதமாய்-இவளை
சிற்றுளி கொண்டு செதுக்கியச் சிற்பி
நுண்கலை பிரம்ம சூத்திரமோ...

இடைதொடை பளிங்கு இளவாழைத் தண்டு
நடையுடை பாங்கில் நாகரீகச் செண்டு
கடைவீதி உலாவந்தால் காளையர் மனம் வண்டு
உடைந்து சிதறியது இதயம் பலத் துண்டு

பழியாய் கொன்றது பார்வை ஏவுகணை
அழியாய் கனவுகளில் இவளானாள் காதலணை
ஒழியாய் துளைத்தது மன்மத மலர்க்கணை
உழிதாய் உழன்று அதிர்ந்தது கல்லணை

விண்ணப்பப் பருவமழை பொழிந்தது காதல்மொழி
நிராகரித்துக் குவிந்தது இவள்வீட்டு உரக்குழி
எண்ணங்கள் ஏற்புடைய வரம்தேடும் இவள்விழி
முறைகொண்டு சுகம் காணும் இல்லறமே இவள்வழி

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (10-Aug-18, 11:40 am)
பார்வை : 101

மேலே