A FEW DEW DROPS

பனித் துளிகளில்
சில
தரையில் விழுந்து
மறைந்தன !
சில
மலரிதழில்
முத்துக்களாகச்
சிதறிக் கிடந்தன #
கவிதை
விரைந்து எழுது
கதிர் விரிய
நாங்களும் மறைந்து விடுவோம்
என்று மெல்லச் சிரித்தன #

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-18, 2:59 pm)
பார்வை : 55

மேலே