சாமிகள் சாதி பார்ப்பதில்லை
கோவில் கட்டும் கொத்தனாரிடம்
என்ன கொத்திரம் என கடவுள்
கேட்டதில்லை...
நாதஸ்வரம் இசைக்கும் கலைஞரிடம்
என்ன மதம் என கடவுள்கள் கேட்டதில்லை..
துப்புரவு செய்யும் தொழிலாளியின்
சாதி பற்றி கடவுள் வினவுவதில்லை..
இந்த வீதியில் செல்லமாட்டேன் எ
எந்த சாமிகளும் சொன்னதில்லை..
சாதி மதம் என்னவென்று யாரையும் சாமிகள் கேள்வி கேட்பதில்லை....