காதல்

பெண்ணே, இதோ பார்
இந்த இடத்தில் இதே
இந்த இடத்தில் , கடற்கரையில்
உன்னைப் பார்த்தேன்
நீயும் என்னைப்பார்த்து
புன்னகைத்தாய் என் மனதில்
நிறைந்தாய் , மௌனமாய்
சென்றுவிட்டாய்
அன்றுமுதல்,பெண்ணே
பித்தாய் உனக்காக
நித்தம் நித்தம்
அதே அந்த இடத்தில்
வந்து காத்து நிற்கின்றேன்
நீயோ வரவில்லை
ஆனால் என் மனதில்
தங்கிவிட்டாய்... உன்னை
மறக்கவும் முடியவில்லை...


பெண்ணே, இந்த
நீல கடல் அலையைப்பார்
ஓயாது வந்து கரையை
முத்தமிட்டு அணைக்கிறது
போகிறது, மீண்டும்
மீண்டும் வருகிறது
அணைத்துக்கொள்ள
இப்படி... இந்த கடல் அலையும்
கரையும் செய்யும் காதல் .............
நீயோ, பெண்ணே
ஒரே ஒரு முறைத்தான்
உன் பார்வையெனும் அலையால்
என்னைத் தொடாமல் தொட்டுவிட்டாய்
என் மனதில் நின்றுவிட்டாய்
இதோ நிற்கின்றேன் இங்கு உனக்காக
பித்தாய்.............வந்தணைப்பாய் என்று
வருவாயா....... வருவாயா...........

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Aug-18, 10:40 am)
Tanglish : kaadhal
பார்வை : 246

மேலே