யாருக்குத்தான் பிடிக்காது
கன்னத்தில் குழிவிழ சிரித்தால்
யாருக்குத்தான் பிடிக்காது
நட்சத்திர குவியலாய்
கண்கள் சிமிட்டி சிமிட்டி
பார்த்துக்கொண்டிருந்தால்
யாருக்குத்தான் பிடிக்காது
உதடுகளை குவித்து குளிர்காற்றாய்
முத்தமிட முயற்சிக்கும்போது
மெல்லிசையாய் சிணுங்கினால்
யாருக்குத்தான் பிடிக்காது
அலைபாயும் மனதோடு
கடலாட கலங்கரை விளக்காய்
அன்பு தீபமாய் சுடர்விட்டால்
யாருக்குத்தான் பிடிக்காது
தூக்கத்திலும் விரல்களை கோர்த்தபடி
நெஞ்சில் முகம் புதைத்து
சலனமின்றி உறங்கும்போது
குழந்தையையும் குமாரியையும் தாலாட்ட
யாருக்குத்தான் பிடிக்காதுது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!