காதல் கவிதை

நீ ..

கலையான முகத்தின் எடுத்துக்காட்டு...

உன் முகம் கொஞ்சம் எடுத்து காட்டு....

மொட்டும் மலராக மாறும் நேரமோ என ஐயம் கொண்டேன்...

உன் புன்னகையால்....

உன் கண்ணக்குழி ?

உலகில் அழகு எது என தேடும் கேள்விக்கு முற்றுப்புள்ளி....

இது இந்த கவிதையின் முற்றுப்புள்ளி....

எழுதியவர் : கதிரவன் (12-Aug-18, 11:20 pm)
சேர்த்தது : kathiravan
Tanglish : kaadhal kavithai
பார்வை : 902

மேலே