இவர்களுக்காக

உயர்ந்த மலையினிலும்
உண்ணக் கிடைக்கிறது,
ஆட்டுக்கு..

பரந்த உலகினில்
மனிதன்
பசிக்கு உணவைத் தேடாமல்,
பட்டினி என்கிறான்-
படுத்துக் கிடந்தபடி..

எடுத்து ஊட்டினாலும்,
கடித்து உண்பதையும்
தடுக்கிறது
இவனது சோம்பல்..

இவர்களுக்காகக் கவலைப்பட்டு
இருக்கும் காலத்தை
வீணாக்காதே,
கிடக்கட்டும் இவர்கள்,
தொடர்ந்திடு உன் பணியை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Aug-18, 7:29 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : ivargalukkaga
பார்வை : 106

மேலே