இவர்களுக்காக
உயர்ந்த மலையினிலும்
உண்ணக் கிடைக்கிறது,
ஆட்டுக்கு..
பரந்த உலகினில்
மனிதன்
பசிக்கு உணவைத் தேடாமல்,
பட்டினி என்கிறான்-
படுத்துக் கிடந்தபடி..
எடுத்து ஊட்டினாலும்,
கடித்து உண்பதையும்
தடுக்கிறது
இவனது சோம்பல்..
இவர்களுக்காகக் கவலைப்பட்டு
இருக்கும் காலத்தை
வீணாக்காதே,
கிடக்கட்டும் இவர்கள்,
தொடர்ந்திடு உன் பணியை...!