மலருக்கு ஓர் அருச்சனை

அருச்சனைப் பூக்களில் ஒன்று
எஞ்சிக் கிடந்தது பூக்கூடையில்
எடுத்துச் சென்றேன் ஆலயத்திற்கு
ஆலயவாசல் மூடிவிட்டிருந்தது !
என் செய்வதென்று என்று யோசித்தேன்
அருச்சி என்றது மலர்
அருச்சித்தேன் மலரை
கவிதைப் பூக்களால் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-18, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே