வாழ்வு
பிறப்பென்று ஒன்று வைத்தான் அவன்
பிறந்தவை எல்லாம் சிலநாள் வாழ்வதற்கு
பிறந்தவையில் எல்லாம் அழிவும் வைத்தான்
வாலறிவன் எதற்கு புவியில் பிறப்பிறப்பில்
சமம் செய்து புவி நிலைகுலையாது நிற்க
இதில் அவனுக்கு விளையாட்டு நமக்கோ
வாழ்வின் இன்பம் துன்பம் அடக்கமிதில்.