எழுத்திற்கு என் முதல் *எழுத்து*

எழுத்தழகி எழுந்து நிற்கிறாள்
வற்றா வலை நதியிலே
எழுத்தழகியைப் பார்க்க
எழுந்து வருகின்றனர்
கோடி ரசிகர்கள்......


உனது உடலிலும் ஒலியிலும்
எத்தனை பேருக்கு மோகமடி
உன் பூ உடம்பிலும் புத்துயிரிலும் எனக்கும்
ஓர் மயக்கமடி....


குறிலோடும் நெடிலோடும்
நடமாடும் நதி நீயடி...


இதழ்களில் இசை பாடும்
இனியவளும் நீயடி.....


தனிமையிலும் பொருள் தரும்
தேன் நிலவும் நீயடி.....


கூடி நின்று கதை பேசும்
குமரியும் நீயடி.....


பொருளோடு மதி மயக்கும்
பேரழகியும் நீயடி.....


பொட்டோடு பிறந்த பொல்லா
தமிழச்சியும் நீயடி.....


உயிரோடும் உடலோடும்
உறவாடி உறவை வளர்ப்பவளும் நீயடி......


எதிரினிலே எழுந்து நிற்கும்
எழுத்தழகியும் நீயடி ..... உன்னை எழுதாதவர் யாரடி...


சாலை எங்கும்
உன் பேச்சுதானடி.....
சாதி, மத, பேதமின்றி உலகே
உன்னை காதல் செய்வதும்
உண்மைதானடி........

எழுதியவர் : Rifka (14-Aug-18, 2:06 pm)
சேர்த்தது : Rifka
பார்வை : 117

மேலே