யாரோ இவர் யாரோ - பைரவி

அருணாசல கவிராயர் பாடல்
பல்லவி;
யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே
(யாரோ)

அனுபல்லவி;

காருலாவும் சீருலாவும் மிதிலையில் கன்னிமாடம் தன்னில் முன்னே நின்றவர்
(யாரோ)

சரணம்:

சந்திர பிம்ப முக மலராலே என்னைத் தானே பார்க்கிறார் ஒரு காலே
அந்த நாளில் சொந்தம் போலே உருகிறார் இந்த நாளில் வந்து சேவை தருகிறார்
(யாரோ)

Sanjay Subrahmanyan-Yaro Ivar Aro என்று யு ட்யூபில் பதிந்து சஞ்சய் சுப்பிரமணியன் இப்பாடலைப் பாடுவதைக் கேட்கலாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Aug-18, 3:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 77

மேலே