காதல்

மருண்ட மான் விழிப் பார்வை
அவள் முதல் பார்வை -என்
பார்வையால் மருட்சி போனது
மீண்டும் பார்த்தாள் , பார்வை
கூர்மையானது அவள் பார்வை
அப்படியே என்னை ஊடுருவியதோ...............
காதலும் பிறந்தது, எல்லாம் எங்கோ
பறந்துபோனது, ஆம் வெட்கம் நாணம்........
பெண்மை நடந்துவந்தது ஆடி அசைந்து
அன்னம்போல் பெண்ணாய் அல்லவோ
என்னை தொட்டு என் கைகளை பிரித்து
அதில் வந்தமர்ந்து எனக்கு காதல்
பாடம் கற்றுத்தரவா என்றதே .........
நீச்சல் கற்க முதலில் நீரைக்கண்டதும்
வரும் பயம், பயம்போனபின் ...........
நீந்துபவர்க்கு நீரின்மேல் வரும் காதல்
அதுபோல் அமைந்தது காதல் இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Aug-18, 5:02 pm)
Tanglish : kaadhal
பார்வை : 289

மேலே