சிவன் கோவில்

வாரம் இருமுறை நான் செல்லும் சிவன் கோவில் பிரகாரத்தின் மூலையில் உள்ளது நாலுக்கால் மண்டபம்
அந்த நாலுக்கால் மண்டபத்தின் ஒருக்காலில் செதுக்கப்பட்ட முருகன் சிலை இடையை உடைத்து வளைந்த பழநிமுருகனை ஒத்து இருக்கும்.
அதை ரசித்து பேசும் போதெல்லாம் சிவா "டேய் பாலா சிலையில எண்ணெய் தடவ தடவ உருவம் இன்னு அழகா தெரியுடா" என அவன் சொல்ல
அப்பா விளக்கேற்ற தந்த எண்ணெய்யை சிலைக்கு தடவிய நிகழ்வு இன்னும்
என்னை தடவிக்கொண்டே தான் இருக்கிறது வழவழப்பாக.

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (15-Aug-18, 10:16 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : sivan kovil
பார்வை : 172

மேலே