பூனைகள் ஜாக்கிரதை

கடித்துக் குதறும் சிலப் பூனை
கடத்தப் பார்க்கும் சிலப் பூனை
இரையாய்ப் பார்க்கும் சிலப் பூனை
துரத்தி மகிழும் சிலப் பூனை

பலப் பூனைகளிடம் சிக்காதிருக்கவே...
பூட்டியக் கூண்டுக்கிளியாய் வாழ்கிறோம்...

நீலவானம் கண்ணெதிரில்
நீந்தித்திரிய வழியில்லை..
கனிந்திருக்கும் மரக்கிளைகள்
கொத்தித் தின்ன வழியில்லை..

பரந்து விரிந்த வயல்வெளியில்
பறந்துத் திரிய வழியில்லை..
சிறகு முளைத்தப் பின்னரும்
சுதந்திரம் மட்டும் கிட்டவில்லை..

இரும்புக் கூண்டை உடைத்திடலாம்
இதயக் கூண்டை என்னசெய்ய..
பூட்டை உடைக்க வலியுண்டு
பாசக் கயிற்றை என்னசெய்ய...

சிறகதனை விரிக்காமலே
சிறைக்குள்ளே முடிந்திடுமோ
சின்னஞ்சிறிய என்வாழ்க்கை...

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (15-Aug-18, 7:25 pm)
சேர்த்தது : கிருஷ்ணநந்தினி
பார்வை : 67

மேலே