எட்டாத வான் நிலவே
என்னவளே
என்மனம் நிறைந்தவளே...
எட்டாத வான்நிலவாய் நீ
ஏக்கத்திலும் சுகம் தருகிறாய்..
எட்டிப்பிடிக்க வழியில்லை என
எண்ணித் துவளும் போது
நீரில் விழுந்த நிலவாய்
நிழலாய் என் கை சேர்கிறாய்...
கரம் சேர்ந்த உன்னை
கட்டித் தழுவ நினைக்கையில்
கண்ணாடியாய் என்முகம் காட்டினாய்...
கலங்கிய என் விழிகளின் கண்ணீரும் கற்கண்டாய் இனிக்கிறது...
மறித்து போன என்மனதில்
மீண்டும் மலர்ந்த காதலினாலே...