சாட்சிகளானது

தெரு விளக்கு இல்லாத அன்று
பேய், பிசாசு நடமாடுமென்று
பாட்டிமார்கள் சொன்னது
பாடமாகிப் போனதால்
ஊர் மக்கள் எல்லோரும்
வெளியே வர பயந்தார்கள்,
பக்கத்து ஊருக்கு போகக்கூட
பகலில் தான் பயணங்கள்

பாதைகள் முன்பெல்லாம்
பக்கத்து ஊர்களுக்கு வழி காட்டும்
பகவானை வேண்டிக்கொண்டு
பத்திரமா போய் வருவார்கள்,
இப்போதெல்லாம் பாதையில்
பேய், பிசாசுகளெல்லாம்
நிசமாக வீழ்ந்து கிடப்பதால்
இறைவனும் நடமாட அஞ்சுகிறான்

போதை ஏத்தும் சரக்கால
பாதையில் கிடக்கும் குடிமக்கள்
போக்கத்துபோன வழித்தடங்கள்,
அடுத்த ஊர் கூட
அண்டை நாடுபோல
அந்நியபட்டு போனதால்
சண்டை, சச்சசரவுகள்—அன்றாட
காட்சிகளாகி, சாட்சிகளானது

எழுதியவர் : கோ. கணபதி. (19-Aug-18, 6:36 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 42

மேலே