தியானம்

=========
தியானிப்பவர்களின் வருகையில்
முறியும் தியானத்தை,
தியானித்து முடித்து அவர்கள்
வெளியேறி ஓய்ந்ததும்
மறுபடியும் முதலிலிருந்து
ஆரம்பிக்கத் தொடங்கிவிடுகிறது
நிசப்தமாகும் அந்த மண்டபம்.
****
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-Aug-18, 2:07 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 139

மேலே