பஞ்சவடி

கடவுளை வணங்கென்றோ
கடவுளை நம்பென்றோ
கடவுள் தருவார் என்றோ
கட்டாயம் கூற மாட்டேன்.

பஞ்சவடி – பஞ்சமுக ஆஞ்சநேயர்
கோயில் படியேரறுங்கள்.

நீங்கள் பார்க்க வேண்டாம் அவரை
அவரே உங்களைப் பார்ப்பார்!

எத்தனை பெரிது
பெரிதினும் பெரிது.

கும்பிட வேண்டாம்
நம்பிட வேண்டாம்.

பாருங்கள்; பார்த்துவிட்டு
வாருங்கள்.
மறையுமா மனம்விட்டு
மறக்க முடியுமா?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (22-Aug-18, 7:44 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 101

மேலே