நினைவுகள்

சில சிரிப்புகளின் முடிவில்
பல சோகங்களை காண்கிறேன்
சில பாடல்களின் வரியில்
உன்னோடு நான் கடந்த
பல பயணங்களை பார்க்கிறேன்...
நிறம் அற்ற நீர்த்துளிகள்
எந்தன் விழிகளில் வந்து கூடுகிறது
என்றோ நான் தவறவிட்ட உந்தன்
நிஜங்களை நினைக்கையில்...

அனிதா....

எழுதியவர் : அனிதா (23-Aug-18, 2:40 pm)
Tanglish : ninaivukal
பார்வை : 104

மேலே