காதல் தூது
மூன்றெழுத்து வார்த்தையென
முடிவெடுத்தேன்
மூவுலகை ஆளுமென்று
தெரியாமல்...!
நான்..
நூறுமுறைப் பார்க்கவில்லை
அவள் முகத்தை
அந்த...
இருநொடியில் இழந்துவிட்டேன்
இருதயத்தை...!
நீ...
இமைத்திறந்து
எனைப்பார்த்த சில நிமிடம்
நான்..
பிறந்ததே தெரியாது
பலவருடம்...!
காதலுக்கு
தூதுவிட்டேன் பலபொருளை
உன்...
பார்வையினால் பலிகொடுத்தாய்
கடைசி வரை...!
நான்...
முதன்முதலாய் தூது விட்டேன்
பார்வையிலே...
நீ...
பார்த்தவுடன்
நான் விழுந்தேன்
போதையில்...!
மறு தூது
நான் கொடுத்தேன்
மலரெடுத்து...
என்மீது
நீ வந்தாய்
போர்தொடுத்து
காகிதத்தில்
தூது விட்டேன்
கவி எடுத்து...
நீ...
கண்ணெதிரில் சாய்த்து விட்டாய்
வாளெடுத்து...!
இங்கு...
எவருமே அறியாத
காதல் வலி
நான் மட்டும்
அறிவதுவா
எனது விதி...!
காதல் சொல்ல
நான் வளர்த்தேன்
பச்சைக் கிளி
உனை
பார்த்தவுடன் மறந்ததடி
காதல் மொழி
அன்று...
நீர் விட்டு நான் வளர்த்தேன்
காதல் மொட்டு...
இன்று...
செந் நீர்விட்டு அழுத்ததடி
பல கண்கள் பட்டு...!
நான்...
காதல் படம்
பார்த்து வந்தேன்
காலமெல்லாம்...!
அதில்
சாரைப்பாம்பும் படமெடுக்கும்
காதல் வந்தால்...!
காதலுக்கு
கவிப்படைத்தக் கவிஞரெல்லாம்
அவன் காதலித்துப் பாத்திருந்தால்
அழுதிருப்பான்...!
அந்த தாஜ்மஹால்
காதலுக்குச் சின்னமடி
என் கவிதைக்கு
உன் பெயரே வண்ணமடி...!
உன் கால் கொலுசு
காதல் மொழி பேசுதடி
அந்தக்
கைவளையல்
கவிதை பல வீசுதடி...!
உன் காதோரம்
ஆடுகின்ற கூந்தல் முடி
அது...
என்காதல் புத்தகத்தில்
படருங்கொடி...!
உன் விரலோடு மின்னுகின்ற
நகங்களெல்லாம்
விலைபேசி முடியாத
வைரமடி...!
இனி...
நானின்றி நீவாழக்
கூடுமடி...
நீ இன்றி
நான் வாழ்ந்தால்
சாபமடி..,!