அன்பெனும் அறம்

வாழ்க்கை கல்லூரியில் இளசுகள்
பொய் உரைக்கா புலவரின்
ஈரடி முத்துக்களை ஆய்வு செய்ய
ஈன்றோர் தவவேதனை சிதறியது காண் !

அன்போடு இயைந்த உடம்பு
பண்போடு உய்ய வேண்டுவது யாதெனில் ....
கண் உடையார் கசடற கற்க
எண்ணும் எழுத்தும் தொடருமாம்
எழு பிறப்பும் தொட்டனைத்து !

கற்றோர் கண் ஒழுக்கம் நன்றே
கற்றான் முன் நாவடக்கம் பணிந்து !
பிறப்பின் மகத்துவம் அறிந்து செயின்
அறவினான் இன்னா செயல் பிறர்க்கு !
பக்குவம் பரிசீலிக்க.....

அனங்கை ஆட்கொண்டது இனி அறிந்தேன்
தகையாள் நோக்கெதிர் நோக்குதல் புடைத்து !
மடந்தை மதிமுகம் மிளிரும் காண்
அனிச்சம் அன்னமும் அருந்ததி கண்டு !

எடுப்பார் கைப்பிள்ளை இனி வேண்டா
தந்தை தாய் மதியும்
தமிழ் சிசு இருகரம் கும்பிட
ஆறத்தழுவ ஆட்கொண்டது
அன்பெனும் அறம் !
இனி
அன்பு கடமை செய்காண்
இறை கவர்ந்தான் நானிலம் தைத்து !

எழுதியவர் : (30-Aug-18, 7:01 pm)
பார்வை : 73

மேலே