தமிழினம்

தமிழினமே !



தம்மின அழிவுப் பயணத்தை

அறிந்தும் தன்னிலை யறியா !

மூடர் கூடமாய் பிறரை ஏய்த்து

வாழும்வெள் ளாட்டு மந்தையோ !

திரையை நிஜமாக்கித்தன் சுயமறந்து

தரையை நிழலாக்கித்தன் திறமறந்து !

தலைமைக்குத் திரையைத் தேடும்

நாயகனின் ஏவுகனைக் கூட்டம் !

பொதுவுடைமையை அழித் தொழித்து

தனிவுடைமையைத் தலைத்தோங்கச் செய்து !

தன்வுடைமையை, உணர்வை மறந்து

அடிமையாய் ஆளும் ஆளுமை !

படைப்பவனைப் போற்றாது படைத்தவனை

போற்றி ஏய்க்கு மாட்சி! இதனை

உணர்ந்தும் உண்டு உறங்கும்

உணர்வில்லாத் தோழமைகளின் புகலிடமோ !



- இன்றும் என்றும் தமிழனாய்

மா-சங்கர்

எழுதியவர் : மா.சங்கர் (31-Aug-18, 10:51 pm)
சேர்த்தது : ச ங் க ர் ராஜா
பார்வை : 213

மேலே