தமிழினம்
தமிழினமே !
தம்மின அழிவுப் பயணத்தை
அறிந்தும் தன்னிலை யறியா !
மூடர் கூடமாய் பிறரை ஏய்த்து
வாழும்வெள் ளாட்டு மந்தையோ !
திரையை நிஜமாக்கித்தன் சுயமறந்து
தரையை நிழலாக்கித்தன் திறமறந்து !
தலைமைக்குத் திரையைத் தேடும்
நாயகனின் ஏவுகனைக் கூட்டம் !
பொதுவுடைமையை அழித் தொழித்து
தனிவுடைமையைத் தலைத்தோங்கச் செய்து !
தன்வுடைமையை, உணர்வை மறந்து
அடிமையாய் ஆளும் ஆளுமை !
படைப்பவனைப் போற்றாது படைத்தவனை
போற்றி ஏய்க்கு மாட்சி! இதனை
உணர்ந்தும் உண்டு உறங்கும்
உணர்வில்லாத் தோழமைகளின் புகலிடமோ !
- இன்றும் என்றும் தமிழனாய்
மா-சங்கர்