நடக்கும் வயது
அன்று சாய்ந்த நாற்காலியில்
அமர்ந்திருந்த அப்பா முன்
நான்கு காலில் நடந்த நான்
இருக்காலில் நடக்க ஆசைப்பட்டு
தாமாக எழுந்தேன் பின் தானாக விழுந்தேன்
பலூன் வயறுவெடிக்க சிரித்த அப்பாவின் சிரிப்பு
இன்றும் என் காதில் அடைப்பட்டு ஒலிக்கிறது
இன்பமாக.
இன்று கட்டிலில் படுத்துக்கொண்டிருந்த அப்பா முன்
அவர் உழைப்பில்
நான்கு காலில் நடந்த நான்
என் இரண்டு காலில் நடக்க ஆசைப்பட்டு
சிலமுறை எழுந்தேன் பலமுறை வீழ்ந்தேன்
அவர் வற்றிய வயிற்வற்ற
பெருகிய கண்ணீர்
இன்றும் வழிகிறது
என் கண்ணில் துன்பமாக.