நந்தவனத்தில் ஒரு ரோஜாப்பூ

நந்தவனத்தில் ஒரு ரோஜாப்பூ
முள் சூழ்ந்திருந்த வருத்தத்தில்
உன் விரல் பறித்து விடுதலை அடைந்து
நீ காதோரத்தில் சூடியபோது
நன்றி நவின்றது
மகிழ்ந்து சிந்தியது
ஆனந்தக் கண்ணீர் !

எழுதியவர் : கவின் சாரலன் (2-Sep-18, 4:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 95

மேலே