ஒற்றை சொல்லை வரமாக தாராயோ

மழை என்றும் பாராமல்
வெயில் என்றும் பாராமல்
உனக்காக காத்திருக்கிறேன்...
ஒற்றை சொல்லை வரமாக தாராயோ
இல்லை வரமாகவே நீ வாராயோ !
மொட்டவிழ்வது போல்
மனம் திறந்து காட்டிவிட்டேன்...
கட்டழகியே நீ
கண்ணசைவிலாவது
சம்மதம் சொல்லிவிடு
நான் உனக்கு சொந்தமென்று...!
தாராள குணமாம் உனக்கு...
உன்னை அறிந்தோர் சொல்லிக்கேட்டிருக்கிறேன்...
அதனால் தாராயோ எனக்கு உன் மனம்..
காலம்பூராவும் இளைப்பாரி
நானும் கிடக்கின்றேன்..!
உன்னை நினைத்து
நட்டுவைத்த மல்லிகையும்
நன்றாய் பூத்து குலுங்குதே...
உனக்காக காத்து காத்து...
என் உயிரோ
தினம் வாடி போகுதே...
உனக்கு மணப்பட்டு கட்டி காண
வாஞ்சையோடு காத்திருக்கிறேன்...
பட்டமரமாய் ஆக்கிவிடாதேயடி...
நானோ பயனற்றவனாகி போய்டுவேன்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (3-Sep-18, 8:20 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 500

மேலே