மழைத்துளி
மழையே
நீ வானம் சிந்தும்
தண்ணீர் துளிகள் அல்ல
என்னவளை ஆராதிக்கும்
பன்னீர் துளிகள்...
மழையே
நீ மேகம் தெளிக்கும்
நீர் துளியல்ல
என்னவள் வாசலில் கோலமிட
நீ இடும் நீர்புள்ளிகள்...
மழையே
நீ மேகங்கள் குளிர்ந்து பூமியில்
உதிரும் நீர்ச்சொட்டுக்கள் அல்ல
என்னவள் மீது பொழியும்
பூ மொட்டுக்கள்...