நினைவெல்லாம் நீயே

வெட்டிப்பையன் போல்
ஊரை சுற்றி வந்தேன்
வெட்டும் கத்தி பார்வையை கொண்டு
உன்னை சுற்ற வைத்தாயடி பாவி ...
உறவுகள் வேண்டாம் என்று நினைத்து
கொண்டிருந்த நேரத்தில்
என் உறவே நீதான் என நினைக்க
தோன்றுதடி...
இதை உன்னிடம் சொல்லிவிடலாம்
என்றாலோ
தயக்கம் தடுக்கிறது


எங்கே நீ
என்னை கருதிவிடுவயோ
எருக்கம் பூவாய் என்று ...
என் பாதைகள் கூட
நீ இல்லாமல் பாலைவனம் போல் உள்ளதடி ..
முடிவில்
உன் தொல்லைகள் தாங்காமல்
உன்னை நினைத்து விஷம் அருந்தலாம்
என்றாலோ
உன் வார்த்தைகள் போல்
தித்திக்கிறதே .....

தூக்கு போடலாம் என்றாலோ
உன் கூந்தல் என் ஞாபகத்திற்கு வந்து
தடுக்குதடி...
நீரில் மூழ்கி இறந்து விடலாம் என்றாலோ
உன் கொலுசு ஒலி சத்தம் கேட்கிறதே...
இதில் இறக்கவும் முடியவில்லை

உன்னை இறுக்கமாக அணைக்கவும்
முடியவில்லை...
எதிலும் நீயே தெரிகிறாய்
என்
நினைவெல்லாம் நீயே வாழ்கிறாய் ....!

எழுதியவர் : நிவேதா (8-Sep-18, 8:48 am)
சேர்த்தது : நிவேதா
Tanglish : NINAIVELLAM neeye
பார்வை : 137

மேலே