கரையை தேடும் கனவு

வாழ்க்கை என்னும் கடலில்
கனவு என்னும் கரையை நோக்கி
ஆசை என்னும் அலைகளை கண்டுகொள்ளாமல்,
அறிவுரை என்னும் ஆழத்தை நினைக்காமல்,
கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை மனதில் கொண்டு,
கடந்து வந்த பாதையை நினைத்து கவலைபடாமல்
கரைதொடும் நேரம் தூரம் இல்லை என நினைக்கும்,
உறுதியான மனம் வேண்டும்
உறுதுணையாக சிலர் வேண்டும்...!!!
சிந்திக்க நேரம் வேண்டும்,
சிறந்து விளங்க...
சிறப்பான செயல் வேண்டும்..!!!

எழுதியவர் : தப்ரேஸ் சையத் (8-Sep-18, 1:01 pm)
சேர்த்தது : தப்ரேஸ்
பார்வை : 2545

மேலே