ரகசியம் 5

தொலைக்காட்சி பெட்டியில்
பாட்டை கேட்டு கொண்டே இருக்க திடீரென
ஊரில் ஒரு தம்பட்டம்
அடித்து கொண்டு இன்று ஊர் மக்களுக்கு ஒரு தெரிவிப்பது என்னவென்றால்...... இன்று அமாவாசை என்பதால்
ஊர் மக்கள் இருட்டு வதற்கு பின்
வீட்டை விட்டு வெளியே வரகூடாது என ஊர் தலைவர் சார்பில் அறிவிக்குறோம்.......
தம்பட்டம் முடிந்ததும்
அன்பு, நித்யாவைப் பார்த்து ஆம் நேத்து இரவு நான் வந்ததும் பெரியப்பா என்னை உள்ளே இழுத்து உடனே கதவை தாழ் இட்டார்....
பின் நான் சாப்பிட்டு படுக்கை சென்ற போது சன்னல் ஓரம் ஏதோ??? சத்தம் கேட்டது பயங்கரமான சத்தம் அது... நான் வெளியே வந்து பார்க்க
கதவு பூட்டி இருந்தது.....அது மட்டுமல்லாது
சன்னலும் திறக்க முடியவில்லை.....

என்ன நடக்கிறது இங்கே? என்ன சத்தம் அது? உனக்கு ஏதாவது தெரியுமா?என கேட்டான் அன்பு......
நித்யா அதுவா!!என் ஆரம்பிக்க பெரியம்மா வந்து விட்டார்... அவர் அன்பும்,நித்தியாவும் பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்....
அது ஒன்னும் இல்லை அது இந்த ஊர் வழக்கம் என்று முடித்தார். பின் நித்யாவிக்கு கண்ணசைத்து சொல்ல கூடாது என மறைந்தார்.

என்னவாக இருக்கும் அந்த ஊரின் மர்மம்? என்னவாக இருக்கும் ?அமாவாசையில் என்ன நடக்கும்?...அன்பிடம் எதை மறைக்கின்றார் பெரியம்மா?

எழுதியவர் : உமா மணி படைப்பு (13-Sep-18, 1:07 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 132

மேலே