கலைஞர்
வங்கக் கடலோரம்
தங்கத் தமிழ்மகன் !
மீளாத் துயிலில்
மீண்டுவரா நிலையில் !
ஓய்வறியா சூரியன்
ஓய்வாய் உறங்குகிறான் !
அண்ணனை தொழுதவன்
அண்ணனின் அருகில் !
உடன்பிறப்பென அழைத்தவன்
உடன்பிறப்புகளை அழவைத்தான் !
கழகத்தைக் காத்தவன்
கடற்கரையில் அடக்கம் !
தமிழுக்காக போராடியவன்
தனைவைக்க போராடினான் !
உள்ளவரை இகழ்ந்தோரும்
உள்ளத்தில் அழுகின்றார் !
இறுதிவரை நமை நினைத்தவனை
இருக்கும்வரை நாம் நினைப்போம் !
உயிராய் கண்டவனை
படமாய் காண்கிறோம் !
பன்முக வித்தகருக்கு
பாரெங்கும் புகழஞ்சலி !
இதயத்தில் வலியுடன்
கலைஞருக்கு எனதஞ்சலி !
பழனி குமார்