கலைஞர்

வங்கக் கடலோரம்
தங்கத் தமிழ்மகன் !

மீளாத் துயிலில்
மீண்டுவரா நிலையில் !

ஓய்வறியா சூரியன்
ஓய்வாய் உறங்குகிறான் !

அண்ணனை தொழுதவன்
அண்ணனின் அருகில் !

உடன்பிறப்பென அழைத்தவன்
உடன்பிறப்புகளை அழவைத்தான் !

கழகத்தைக் காத்தவன்
கடற்கரையில் அடக்கம் !

தமிழுக்காக போராடியவன்
தனைவைக்க போராடினான் !

உள்ளவரை இகழ்ந்தோரும்
​உள்ளத்தில் அழுகின்றார் !

இறுதிவரை நமை நினைத்தவனை
இருக்கும்வரை நாம் நினைப்போம் !

உயிராய் கண்டவனை
படமாய் காண்கிறோம் !

​பன்முக வித்தகருக்கு
பாரெங்கும் புகழஞ்சலி !

இதயத்தில் வலியுடன்
கலைஞருக்கு எனதஞ்சலி !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Sep-18, 8:01 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 188

மேலே