காதலன் எண்ணம்....!!!

நீலக்கடலோரம்
உந்தன் ஈர விழியோரம்
நானும் நீந்த வேண்டுமே..!

பாரில் எங்கெங்கும்
பாவை உன் முகத்தை
நானும் கண்டேனே....!!!

நேரில் நீ வந்து
தேனில் பால் சேர்த்து
என்னை விழுங்கினாயே...!!!

வானவில் எடுத்து
வண்ணம் அதை பறித்து
உந்தன் உடலை நெய்தாயோ...!!

எந்தன் விழிகள் மூடும்
நொடியும் இன்று வந்தால்
உந்தன் மடியோடு
என்னை சேர்ப்பாயோ....!!!

இந்த காதலன் எண்ணம் தான்
உன்னையே எண்ணுதே
எந்தன் ஊனும் உயிரும் தான்
உன்னை உன்னியே வாழுதே....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (14-Sep-18, 1:26 pm)
பார்வை : 81

மேலே