கவிதைக்கு ஓர் கவிதை

கவிதைக்கு ஓர் கவிதை

கதைகள் உவமைகளில்
மகரந்தம் செய்தபோது
உயிர் பெற்ற குழந்தை

நேர்மறையும் எதிர்மறையும்
கைகோர்த்து செல்லும்
இலக்கியப்பயணம்

உவமைகளுக்கு வரவேற்புரை செய்து
கருத்து மாளிகைக்குள்
விருந்து படைக்கும்
வசந்த விழா

போர்க்களங்களில் அறியமுடியா
உணர்ச்சிகளை
வரிகரங்களால் ஒளிர்விக்கும்
சூரியன்

புரட்சியாளர்களின்
புண்களில் பூசப்படும் மருந்து

விதிகளின் வீர உரைகளுக்கான
முற்றுப்புள்ளி

ஆயதங்கள் பலமிழந்தபோது
அந்நியருக்கெதிராய்
சுதேசி விதைகளை
அள்ளித்தெளித்த ஆசான்

சுதந்திர குழந்தையின்
கருவறை சென்று
அந்நிய அநீதி பால் புகட்டியவன்

உங்கள் கருப்பு சுதந்திரத்திற்கு
வெள்ளைத்தாள் கொண்டு
வர்ணம் பூசியவன்

உங்கள் சுதந்திர கொடியை
அந்நியன் வற்றிலிருந்து
அறுவை சிகிச்சை செய்த
மருத்துவன்

இயற்கை தாயிடம் மட்டும்
இதய துடிப்பை குறைத்துக்கொண்டு
தன் அழுக்கு கவி குழந்தைக்கு
அழகை யாசகம் கேட்பவன்

எழுதியவர் : இளவல் (14-Sep-18, 1:52 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 166

மேலே