முயற்சி

முயற்சி

உளிதான் உருவில் சிறிதாகும்-அது
உடைத்தால் மலையும் பொடியாகும்!
வெளிதான் வானம் பெரிதாகும்
வெளிச்சம் தருவது சிறுகதிராகும்!
துளிதான் மழையே என்றாலும்
தொடர்ந்தால் உலகே கடலாகும்!
வலிதாம் விதிதான் என்றாலும்
வாழ்வில் முயற்சி பெரிதாகும்!
மனிதா! மனிதா! மறவாதே!
முயன்றிட என்றும் தவறாதே!

எழுதியவர் : கவி இராசன் (18-Sep-18, 12:00 am)
பார்வை : 2723

மேலே