ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

வழிவது கண்ணீர் அல்ல
செந்நீர்
மரம் அறுக்கையில் !

நூற்றாண்டுகள் கடந்தும்
கம்பீரமாக நிற்கின்றன
வெள்ளையர் காலத்து கட்டிடங்கள் !

சில ஆண்டுகளில்
விரிசல் விழுந்துள்ளன
அரசியல்வாதிகளின் கட்டிடங்கள் !

முக்கியமன்று குரு பெயர்ச்சி
மிக முக்கியம்
குருவின் பயிற்சி !

விளையாட்டு வினையாகின்றது
வேண்டாம் விளையாட்டு
அலைபேசியில் !

நன்மைகளை விட
அதிகம் தீமைகள்
நவீனத்தில் !

வழங்கப்படவில்லை
வாங்கப்படுகின்றன
விருதுகள் !

சீர்தூக்கி சிந்தித்தால்
நடக்காது
தற்கொலை !

சாக பல வழிகள் இருக்கையில்
வழிகள் உண்டு
வாழவும் !

நினைவு நாளில் மட்டும்
நினைக்கப்படுபவனல்ல
மகாகவி பாரதி !

பிறர் சொல்வதை கேட்காவிடினும்
மனசாட்சி சொல்வதை கேள்
சிறப்பாய் வாழ்வில் !

வேண்டாம் தன்னலச்சீற்றம்
நல்லவருக்கு வேண்டும்
பொதுநலச்சீற்றம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (18-Sep-18, 11:51 am)
பார்வை : 171

மேலே