முதுமொழிக் காஞ்சி 69
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பொருணசை வேட்கையோன் முறைசெயல் பொய். 9
- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் பொருணசையால் வரும் வேட்கையை உடையான் முறைசெய்தல் பொய்.
நசை - இச்சை. வேட்கை - ஆசைப்பெருக்கம். முறை -நீதி.
(ப-ரை.) பொருள் நசை - பொருளில் விருப்பத்தால் வரும், வேட்கையோன் - பேராசையுடையவன், முறைசெயல் - நீதியை மேற்கொண்டு நடத்தல், பொய் - பொய்யாம்.
மிக்க பொருளை விரும்பிப் பேராசையுற்றவன் நடுவுநிலைமையில் நின்று நீதியை மேற்கொண்டு நடக்கமாட்டான்.
வேட்கை - பொருள்களின்மேல் தோன்றும் பற்றுள்ளம். இந்சூத்திரம் அரசனைக் கருதியது.