விதைப்போம்
இதயங்களை கீறி
எண்ணங்களை விதைக்கிறார்கள்,
விளைந்தது அத்தனையும்
விரக்தி என்கிறார்கள்.
அமைதி உரம் இடச்சொல்லி
ஆளாளுக்கு அட்வைஸ்,
அமோக விளைச்சல்
கிடைக்குமாம்.
இவர்களுக்கு ஒன்று
புரியவில்லை,
விதை பழுதாக இருந்தாலும்
விளைச்சல் இருக்காது.
விதைப்போம் நல்ல
எண்ணங்களை,
விளையும் நல்ல
பயிர்களாக.
அப்புறம் என்ன....
நம் ஆத்மாவிலே
தினம் தினம்
ஆனந்த அறுவடை தான்...!!!