காவிரித்தாய்
நதியாய் ஓடிவந்த நீ
இன்றோர் கால்வாய்ப்போல்
காட்சி தருகின்றாய்
வற்றிய உந்தன் கண்ணீராய் ............
இல்லை எப்படியேனும் உன் மக்களுக்கு
இத்தமிழ்மக்களுக்கு உன் முகம் காட்ட
நீ எடுத்த கோலமோ இது..............
இது பொங்கிவரும் உந்தன்
தாயன்பு என்று தெரிகின்றது தாயே,
மீண்டும் பெருநதியாய் நீ
பீடு நடைபோட்டு வரும் நாள்
வாராதோ நான் காண்பதற்கு
சொல்வாய் அம்மா காவிரித்தாயே