சிறுவரைத் தடுக்காதே

மணலைக் குவித்து வீடுகட்டி
மகிழும் சிறுவரைத் தடுக்காதே,
கணினிக் கடலில் மூழ்காமல்
கடற்கரை மணலில் விளையாடி
பிணக்கே யின்றி மகிழ்ந்திருக்கும்
பிள்ளைகள் இவரை அடக்காதே,
மணக்கும் இவர்தம் பெருவாழ்வு
மன்பதை போற்ற உயர்வாரே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Sep-18, 6:55 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 43

மேலே