ஓ வாழ்வில் இவைகள் அனைத்தும் வேண்டியவையா

1. எது இதமானது ?*
தர்மம்.
2. நஞ்சு எது ?*
பெரியவர்களின் அறிவுரையை அவதிப்பது.
3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?*
பற்றுதல்.
4. கள்வர்கள் யார் ?*
புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள்.
5. எதிரி யார் ?*
சோம்பல்.
6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?*
இறப்புக்கு.
7. குருடனை விட குருடன் யார் ?*
ஆசைகள் அதிகம் உள்ளவன்.
8. சூரன் யார் ?*
கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன்.
9.மதிப்புக்கு மூலம் எது ?*
எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது.
10. எது துக்கம் ?*
மன நிறைவு இல்லாமல் இருப்பது.
11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?*
குற்றங்கள் புரியாமல் வாழ்வதை.
12. நிலையில்லாதவை எவை ?*
இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை.
13. மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?*
நல்லவர்கள்.
14. எது சுகமானது ?*
அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது.
15. எது இன்பம் தரும் ?*
நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம்.
16. எது மரணத்துக்கு இணையானது ?*
அசட்டுத்தனம்.
17. விலை மதிப்பற்றதென எதைக் குறிப்பிடலாம் ?*
காலமறிந்து செய்யும் உதவி.
18. இறக்கும் வரை உறுத்துவது எது ?*
ரகசியமாகச் செய்த பாவம்.
19. எவரை நல்வழிப்படுத்துவது கடினம் ?*
துஷ்டர்கள், எப்போதும் சந்தேகத்திலேயே இருப்பவர்கள்,
சோகத்திலேயே சுழல்பவர்கள், நன்றி கெட்டவர்கள்... ஆகியோர் !
20. சாது என்பவர் யார் ?*
ஒழுக்கமான நடத்தை உள்ளவர்.
21. உலகத்தை யாரால் வெல்ல முடியும் ?*
சத்தியமும், பொறுமையும் உள்ளவரால்.
22. யாரைத் தேவர்களும் வணங்குகின்றனர் ?*
எல்லாவற்றின் மீதும் கருணை உள்ளவனை.
23. செவிடன் யார் ?*
நல்லதைக் கேட்காதவன்.
24. ஊமை யார் ?*
சரியான சந்தர்ப்பங்களில் தகுந்த இனிமையான சொற்களைச் சொல்லத் தெரியாதவன்.
25. நண்பன் யார் ?*
பாவ வழியில் போகாமல் தடுப்பவன்.
26. யாரை விபத்துகள் அணுகாது ?*
மூத்தோர் சொல் கேட்டு நடப்பவனையும், அடக்கமுள்ளவனையும்.

எழுதியவர் : சிந்தனை சிற்பி ராஜலட்சும (21-Sep-18, 2:18 pm)
சேர்த்தது : Rajalakshmi
பார்வை : 89

மேலே