இயற்கை

கிரகணத்தால் மேகத்தில் எங்கோ
வான்மதியும் காணாமல்போக
அவன் வரவிற்கு காத்திருந்த அல்லியும்
இதழ்கள் விரியா மொட்டாய் வாடி இருக்க
கிரகணப்பிடியில் இருந்து விடுபட்ட
மதியும் மேகத்தைக்கிழித்து வானில் வந்தான்
தன்னொளி கிரணத்தால் மண்ணில் அல்லியைத்தேட
அதைக்கண்டு அல்லியும் மகிழ்ச்சியில் தன்னை மறந்தே
இதழ்கள் விரிய வானையே எட்டி
காதலனை அள்ளி முத்தமிட பார்த்ததாம்
விண்ணையும் மண்ணையும் இணைக்கும்
இந்த வினோத காதல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Sep-18, 11:59 am)
Tanglish : iyarkai
பார்வை : 352

மேலே