நம்பிக்கை

அழுக்கு ஆடை,
செருப்பு அணியாத கால்கள்,
காதறுந்த பையில்
அரசுகொடுத்த இலவசப் புத்தகங்கள்
எண்ணெய் காணாத தலை.
எடுத்துவைத்தான் ஒவ்வொரு அடியும்
தன்னாலும்
படிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு.
வாழ்வில் வெளிச்சத்தைத் தேடும் அவனுக்காக,
இதோ, இருண்ட குடிசையில்
எரிகிறது ஒரு மண்ணெண்ணெய் விளக்கு!

எழுதியவர் : கவி இராசன் (23-Sep-18, 2:19 pm)
சேர்த்தது : கவி இராசன்
பார்வை : 1840

மேலே