யாருமில்லாத சாலையில்

யாருமில்லாத சாலையில்
###############$$$
யாருமில்லாத சாலையில்
இயற்கையின் சிரிப்போ பூத்திருக்க
ஏறிடும் எண்ணம் வாடிநிற்க
சேரும் இடம் நானறியாது
வேர்த்திருக்கு எண்ணம்
என் பார்வை முழுவதும்
அவள் விம்பங்கள் சூழ
அவளோ காதல் தேனாய் தென்பட
நான் அவள் மீதும்
அவள் என் மீதும்
காதல் சாரல்களின் தூறல்கள்
சிந்தியே
தனிமையை தூரம்மாக்கி
இணைபிரியாத இனிமையில் நடந்து செல்ல
காதல் ஒளி இருள் மறைத்து போனதால்
குளிர் போல குளிர்ந்த காதலும் பனி சிதறல்களை போல சிதறிபோக செய்துவிடவே

யாருமில்லாத சாலையில் நானே

எழுதியவர் : காலையடி அகிலன் (23-Sep-18, 8:59 pm)
பார்வை : 559

மேலே