சிதறியது என்மீது

உலகமக்களின் ஒட்டுமொத்த எண்ணங்களின் அழுக்கையும்,
அள்ளியப்பிய சட்டையை அணிந்திருந்த அச்சிறுவன்.
கையிலடங்கா மாங்கனியை,
எண்ணிலடங்கா ஆசையுடன் கடித்தான்.
சிதறியது என்மீது,
அவனது சந்தோசம்
துளிகளாக...

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (25-Sep-18, 2:27 pm)
பார்வை : 1209

மேலே