என் வீட்டு முற்றம்
என் வீட்டு முற்றம்
வண்டாடும் மலர்கள் வீசும் வாசம்,
வந்தாடும் என்வீட்டு வாசல் கொம்பை,
கொண்டாடும் முல்லைக் கொடியில் பூத்த,
சிந்தாத தேன்கொண்ட சின்னப் பூவை,
கண்டே தான்வந்து சிறகை யாட்டி,
திண்டாடும் ஓர்சிட்டுக் குருவி ஒன்றை,
கண்டேன் நான்இமை யாத கண்களாலே!