அவள் விட்டுச்சென்ற முத்து முத்திரை

* அவள் தந்த முத்தம் முத்திரை
----------------------------------------------
( ஓர் கற்பனை கவிதை)

அன்று முதலிரவாய் வந்த
தேன்நிலவில் என்னவள்
எனக்களித்த ஆசை முத்து
பவளமாய் பதிந்தது
என் கன்னத்தில்
அவளிட்ட காதல் முத்திரையாய்
விடிந்ததும் நிலைக்கண்ணாடியில்
என் முகம் பார்க்க ...... கூடவே
தெரிந்தது அவளிட்ட சின்னம்
பார்ப்போர் எள்ளி நகைப்பார் என்று
எண்ணி அதை கழுவி எடுக்கும் முன்
மனதில் அழியா பெட்டகமாய்
பூட்டிவைத்தேன் ......................

இன்று 'பெரிசுகள் தினம்'
அவள் அன்று தந்த அந்த
விலைமதிப்பில்லா பரிசை
மனதின் பெட்டகத்தை திறந்து
பார்த்தேன் .......
அந்த பவள முத்து முத்திரை
என்னைப்பார்த்து புன்னகைக்க
அவள்................பறந்து போனாளே
அந்த முத்தை மட்டும் விட்டு விட்டு
என் கண்களில் .....என்னை அறியாமல்
முத்து முத்தாய் கண்ணீர் முத்துக்கள்
அழுதும் சிரித்தது பாவி மனம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Sep-18, 9:37 am)
பார்வை : 97

மேலே