அழகியலின் உச்சம் தொட்டாள்

அங்கம் யாவும் பெய்தது
அழகு மழை மேகம்
இதழ்கள் தருவதோ
செர்ரிப் பழ மோகம்
கன்னங்களோ பவளப்
பாறையின் ஓர் பாகம்
குரலில் இழையோடுவது
குயில் பாட்டின் ராகம்
கற்றைக் குழல் தோற்றம்
கருமை நிறம் நாகம்
வசீகர வயலில் இவள்
எப்போதும் விளையும்
முப்போகம்

அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (1-Oct-18, 12:33 pm)
பார்வை : 117

மேலே